சிண்டு முடிந்திடுவாய்ப் போற்றி! – ‘தினமலர்’ 2.2.2025 பக்கம் 6

Viduthalai
1 Min Read

ஒரு உண்மையை ‘தினமலர்’ தன்னை அறியாமலேயே ஒப்புக் கொண்டு விட்டது. பெண்களுக்குச் சொத்துரிமை, மகளிர் சுய உதவி குழுக்கள் முதலியவற்றை மானமிகு கலைஞர் தம் ஆட்சிக் காலத்தில் சாதித்துள்ளார் என்பதைத் தம்மை அறியாமலேயே ஒப்புக் கொண்டு விட்டது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் தந்தை பெரியாரின் மாணாக்கர் என்பதும், பெண் உரிமைக்காகத் தொடர்ந்து பாடுபட்டவர் என்பதும் தி.மு.க. அரசே பெரியார் அரசுதான் என்றும் சட்ட மன்றத்திலேயே பிரகடனப்படுத்தினாரே

– முதலமைச்சர் கலைஞர், அது மட்டும் தினமலர்களுக்குத் தேள் கொட்டுகிறதோ! தந்தை பெரியாருக்கும், கலைஞருக்குமே சிண்டு முடியும் வேலை ஏன்? அறிஞர் அண்ணா அவர்கள் ‘ஆரிய மாயை’ நூலில் ‘சிண்டு முடிந்திடுவாய்ப் போற்றி!’ என்று எழுதியதுதான் நினைவிற்கு வருகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *