கொடி காட்ட ஒன்றரை கோடி ரூபாயா, மோடிஜி?

Viduthalai
1 Min Read

அரசியல்

திருவனந்தபுரம் காசர்கோடு வந்தே பாரத் ரயிலை கடந்த 23.04.2023 அன்று பிரதமர் மோடி கொடி அசைத்து வழியனுப்பினார். 

அப்படியே கேரள அரசின் திட்டங் களை எல்லாம் தனது திட்டம் போல காண்பித்து அந்த திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.   

இந்த நிலையில் மோடி வந்தே பாரத் கொடி அசைத்துவழியனுப்பும் நிகழ்வை நடத்தும் பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனம் கொடி அசைக்கும் நிகழ்விற்கான செலவாக  ரூ.1,48,18,259 அதாவது சரியாக ஒன்றரை கோடி ரூபாய்க்கு பில் அனுப்பியுள்ளது. 

 இது தொடர்பாக அஜய் பாசுதேவ் போஸ் என்பவர்,  தென்னக ரயில்வேக்கு மோடியின் வந்தேபாரத் ரயில் கொடி அசைப்பிற்காக செலவு எவ்வ ளவு என்று கேட் டிருந்தார்.  அவ ருக்கு 5.6.2023 தேதி யிட்ட கடி தத்தில் செலவீன விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இதுவரை மோடி 30-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்களுக்கு கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார். இதன் படி பார்த்தால் வெறும் கொடி அசைக்க மட்டுமே சுமார் ரூ.40 கோடி மக்கள் வரிப்பணத்தை மோடி சூறையாடி உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *