சென்னை, பிப்.2- தமிழ்நாட்டின் காலணி உற்பத்தி துறைக்கு பொருளாதார ஆய்வ றிக்கை அங்கீகாரம் அளித்துள்ளது. இது பெருமைக்குரிய விஷயம் என தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.
இதற்கிடையில் தோல் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வேலூரில் விதிகளை பின்பற்றாமல் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத் தும் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களை திகார் சிறைக்கு அனுப்புவோம் என தோல் தொழிற்சாலை அதிபர்களை எச்சரித்து உள்ளது.
தமிழ்நாடு அரசின் முதலீட்டு முகமையான Guidance அமைப்பு, பல முதலீடுகளை திறம்பட ஈர்த்து வருவதாக ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும், காலணி தயாரிப்புத் துறையில் Guidance அமைப்பு தைவான் நாட்டு நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி யிருப்பதாகவும் முதலீட் டாளர்கள் விரும்பும் இடமாக தமிழ்நாடு ஆகியிருப்பதாகவும் அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், “இந்தியாவின் காலணி மற்றும் தோல் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு ஈடு இணையற்றது. நாட்டின் காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் 38 சதவீதம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த துறை 2 லட்சத்திற்கும் அதிகமான வேலைகளை உருவாக்குகிறது . 80 முதல் 90 சதவீத வேலைகள் தோல் அல்லாத காலணி துறையில் உரு வாக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டின் முற் போக்கான கொள்கைகள் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் விநியோகிக்கப்பட்ட வளர்ச்சியை உறுதி செய்கிறது என்பதையே ஒன்றிய அரசின் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. முதலமைச்சரின் சீரிய முயற்சியால் நைக், பூமா, அடிடாஸ் மற்றும் பல்வேறு உலக காலணி உற்பத்தி நிறுவனங்களுக்கு விருப்பமான இட மாக தமிழ்நாடு உருவெடுத்து உள்ளது” என்று கூறியுள்ளார்.