ஆய்வு நோக்கில் பெரியார்! மாணவர்கள், ஆய்வாளர்கள் கவனத்திற்கு!

1 Min Read

பெரியார் குறித்த விவாதங்கள் தீவிரமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில், பெரியாரை ஆய்வுநோக்கில் உற்றுநோக்கும் ஒரு வாய்ப்பைப் பெரியார் பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கிறது.

பெரியார் பல்கலைக்கழகத்தில், ‘தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி இருக்கை’, ‘பேரறிஞர் அண்ணா இருக்கை’, ‘முத்தமிழறிஞர் தமிழவேள் கலைஞர் மு.கருணாநிதி ஆய்வு’ மய்யம் ஆகியவற்றின் சார்பில், ‘திராவிட இலக்கியம் – இதழியல்’ என்ற தலைப்பில், தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

இதற்காக ஆய்வறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் முதுநிலை மாணவர்களிடமிருந்து திராவிட மானுடவியல், திராவிடத் திரைக்கலை, திராவிட இலக்கியக்கலை, திராவிடப் பேச்சுக்கலை, திராவிட நாடகக்கலை, திராவிட இதழியல் உள்ளிட்ட 20 பொருண்மைகளில் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்பட்டுள்ளன.

விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் ஆய்வுச் சுருக்கத்தையும், பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் முழு கட்டுரையையும் [email protected] முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கருத்தரங்கப் பதிவுக் கட்டணமாக ஆய்வறிஞர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு ரூ.1,500, ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு ரூ.1,000, முதுநிலை மாணவர்களுக்கு ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்தரங்கில், வாசிக்கத் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் குறித்த தகவல்கள் 05.03.2025-க்குள் தெரிவிக்கப்படவுள்ளன. 2025 மார்ச் நான்காவது வாரத்தில் நடைபெறவுள்ள கருத்தரங்கிற்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என்று பெரியார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலதிக விவரங்களுக்கு முனைவர் இரா.சுப்பிரமணி, கவுரவ விரிவுரையாளர் முனைவர் இரா.சிலம்பரசன் ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம்.

– நன்றி: முரசொலி, 1.2.2025

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *