மண் சோறு சாப்பிட்ட மண்ணாங்கட்டிகள்

Viduthalai
1 Min Read

கடலூர், பிப்.2 கடலூர் மாவட்டம், விருத்தாசலம் எருமனூர் சாலையில் உள்ள ஜெகமுத்துமாரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் தை மாதம் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்து நடைப்பயணம் செல்வது வழக்கமாம்!

அந்த வகையில் இந்தாண்டு பக்தர்கள் நடைப்பயணம் செல்வதை முன்னிட்டு திருமணம், குழந்தை வரம் உள்ளிட்ட வேண்டுதல்களுடன் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனராம்!

மண் சோறு
இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்வு நடந்தது. அதன் பிறகு சாமி சிலை ஜங்ஷன் சாலை, பாலக்கரை, கடை வீதி, தென் கோட்டை வீதி வழியாக விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலிலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, கோவிலில் அமைந்துள்ள கலையரங்க மேடையில் அம்மன் சிலை வைக்கப்பட்டது. பம்பை உடுக்கையுடன் தாலாட்டுப் பாடல் பாடப்பட்டது. தொடர்ந்து 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் வளாகத்தில் தரையில் அமர்ந்து மண்சோறு சாப்பிட்டனராம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *