1.2.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* யு.ஜி.சி. புதிய விதிகள் திருத்தத்துக்கு பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு கடும் எதிர்ப்பு. திரும்பப் பெற ஒன்றிய அரசுக்கு கடிதம்.
தி இந்து:
* கேரள கோயிலில் நூற்றாண்டு பழைமையான வழக்கத்தைம் கைவிடப்படுகிறது, ஆண்கள் உள்ளே சட்டை அணியலாம். கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சிறீகவுரீஸ்வரர் கோயிலுக்குள் நுழைய ஆண்கள் மேல் ஆடைகளை கழற்ற சொல்லி கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த காட்சிப் பலகை அகற்றப்படும், என்று கோயிலை நிர்வகிக்கும் விஞ்ஞான வர்தினி சபையின் செயலாளர் ஷெல்லி சுகுமாரன் கூறினார்.
* எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த எதிர்ப்புக் குறிப்புகளின் குறிப்பிடத்தக்க பகுதிகள், வக்பு (திருத்தம்) மசோதா, 2024 மீதான கூட்டு நாடாளுமன்றக் குழுவின் (ஜே.பி.சி) 944 பக்க இறுதி அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம். எதிர்ப்புக் குறிப்புகளை வெளியிட மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் முறையிட முடிவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒன்றிய அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கை, மோடி அரசு மீதான கொள்கைக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள அறிக்கை என காங்கிரஸ் குற்றச்சாட்டு. “இந்த அரசையும் அதன் ஆயுதம் ஏந்திய நிறுவனங்களையும் யாரும் நம்பவில்லை – வணிகம், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் என யாரும் நம்பவில்லை என ப.சிதம்பரம் சாடல்.
தி டெலிகிராப்:
* பிரயாக்ராஜ் நடந்த மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு உத்தரப்பிரதேச பாஜக அரசுதான் காரணம். அரசின் தோல்விகளை மறைத்து வருவதாக முதலமைச்சர் யோகி மீது சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு.
* நாடாளுமன்ற குடியரசுத் தலைவரின் உரையில் ‘சுகாதாரச் செலவுகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன’ என குறிப்பிட்டுள்ளார். ஆனால் நடை முறையில் எங்கே அவ்வாறு உள்ளது? என்கிறார்கள் மக்கள்.
* திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் டெரெக் ஓ’பிரையன், நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவை துணைத் தலைவர் நியமிக்கப்படாமல் போகலாம் என கருத்து. மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றொரு பதவி நீக்க தீர்மானத்தைக் கொண்டு வருமா? என்ற கேள்விக்கு, “பொறுத்திருந்து பாருங்கள்” என பதில்.
.- குடந்தை கருணா