துறையூர் நகராட்சியில் தந்தை பெரியார் ஆளுயர வெண்கல சிலையை பேருந்து நிலையம் அருகே வைக்க தீர்மானம் ஒருமனதாக 31.1.2025 அன்று நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை துறையூர் நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன் முன் மொழிந்தார்.தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. திராவிடர் கழக மாவட்ட தலைவர் ச. மணிவண்ணன் நகர் மன்ற தலைவருக்கு பயனாடை அணிவித்து புத்தகங்கள் தந்து நன்றி தெரிவித்தார். உடன் கழக பொறுப்பாளர்கள்.