அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக் கோரி ராஜீவ் கொலையில் விடுதலையானோர் வழக்கு

1 Min Read

தமிழ்நாடு

மதுரை, நவ. 15-  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ் உள்ளிட்ட இருவர் தங்களை விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பாக ராபர்ட் பயஸ் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பின் 11.11.2022இ-ல் உச்ச நீதி மன்றத்தால் விடுதலை செய்யப் பட்டேன். சிறையிலிருந்து விடு விக்கப்பட்ட நாளில் இருந்து கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள் ளேன்.

இந்த முகாம் சிறையைவிட மோசமானது. அறையை விட்டு வெளியே வரவும், மற்றவர்க ளுடன் பழகவும் அனுமதிப்ப தில்லை. சிறையிலிருந்து விடு தலையான பிறகும் அதே நிலை தொடர்வதால் மன உளைச்ச லுக்கு ஆளாகி உள்ளேன்.

முகாமில் இருந்து விடுதலை செய்யக் கோரி முகாம் அதிகாரி களிடம் கேட்டபோது இலங் கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித் தனர்.

என்னை இலங்கைக்கு அனுப் புவது மரண தண்டனைக்கு ஈடானது. இலங்கைக்கு நாங்கள் சென்றால்கண்டிப்பாக கொலை செய்யப்படுவோம்.

எனவே, நான் இலங்கை செல்ல விரும்பவில்லை. என் மனைவி, மகன், சகோதரி ஆகி யோர் நெதர்லாந்தில் வசித்து வருகின்றனர். என்னை முகாமி லிருந்து விடுவித்தால் எஞ்சியிருக்கும் வாழ்நாளை நெதர் லாந்தில் உள்ள என் குடும்பத் தினருடன் கழிப்பேன். 

இதனால் என்னை கொட் டப்பட்டு முகாமிலிருந்து விடு வித்து, நெதர்லாந்து அல்லது வேறு நாட்டுக்குச் செல்ல அனு மதிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது. 

அதேபோல, ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவில், தன்னை முகாமிலிருந்து விடுதலை செய்து சென்னையில் உள்ள தனது குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வரு கின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *