உண்மைக்கு இன்றைக்கு மதிப்பில்லை என்றாலும் எப்போதாவது ஒரு காலத்தில் உண்மைக்கு உயர்வு கிடைத்தே தீரும். இன்றைக்கு இருப்பது போலவே பெரும்பாலான மக்கள் என்றென்றும் அறிவீனர்களாகவும், முட்டாள்களாகவும், உண்மைக்கு மதிப்புக் கொடுக்காமல் இருப்பவர்களாகவும் இருப்பார்கள் என்று கூற முடியுமா? ஆதலால் உண்மை வெளிப்பட்டு அதுதான் அதிக நாள் நீடிக்குமேயன்றி – இன்றைக்குள்ள பொய்யும், புரட்டும், அதற்கு மதிப்புக் கொடுக்கும் அறியாமைத் தன்மையும், துரோகத்தால், நன்றி மறுத்தலால் பிழைக்கும் தன்மையும் தான் நீடிக்குமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’