கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம்

1 Min Read

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் தக்கலை பகுதியில் மாவட்ட கழகத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்டத் துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பகுதி தலைவர் ச.ச. மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கழக செயலாளர் கோ. வெற்றிவேந்தன் பிரச்சாரத்தினை தொடங்கிவைத்தார்.

தந்தை பெரியாருடைய கருத்துக்கள் அடங்கிய நூல்கள், துண்டறிக்கைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. அமைப்புசாரா தொமுச மாவட்டச் செயலாளர் சி.சுகுமாறன், மாவட்டத் துணைச் செயலாளர் சி.அய்சக்நியூட்டன், இளைஞரணி செயலாளர் இரா.இராஜேஷ், பத்மநாபபுரம் நகர கழக அமைப்பாளர் ஜாபினோ, டாக்டர் கலைச் செல்வன் தோழர்கள் ஜெசிந்தா, கனகபாய், ராஜன், பிரதீபன், டென்னிசன், பிரசன்ன மோகன், ராஜமணி, வில்சன் மற்றும் தொமுச நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *