சென்னை, ஜன.31 குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஒலிப்பானை (ஹாரன்) பயன்படுத்தக் கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்;
* குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது.
*அமைதி மண்டலங்களில், இரவு நேரங் களில் பட்டாசுகளை வெடிக்க கூடாது.
* இரவு நேரங்களில் ஒலியை ஏற் படுத்தும் கட்டுமான கருவிகளை இயக்கக் கூடாது.
*தமிழ்நாட்டில் ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக் கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சட்டப்படி நடடிக்கை
* மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆர்டிஓக்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட் டுள்ளனர்.
* ஒலி மாசு நிர்ணயம் செய்யப்பட அளவை விட அதிகமாக இருப்பதாக புகார் வந்தால் சட்டப்படி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது. இவ்வாறு தெரி விக்கப்பட்டுள்ளது.