10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செயல்முறைத் தேர்வு வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது

viduthalai
1 Min Read

சென்னை, ஜன.31 பத்தாம் வகுப்பு செய்முறைத் தோ்வில் தனித் தோ்வா்கள் பங்கேற்பது தொடா்பாக தோ்வுத் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இது தொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. தோ் வெழுதவுள்ள மாண வா்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தோ்வு அவா்கள் பயிற்சி பெற்ற பள்ளிகளிலேயே பிப்ரவரி 25 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இதற்கிடையே பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ள தனித் தோ்வா்கள் மேற் கண்ட நாள்களில் நடை பெறவுள்ள அறிவியல் செய்முறைத் தோ்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

இந்த செய்முறைத் தோ்வு நடைபெறவுள்ள தேதி குறித்த தகவல்கள் பயிற்சி பெற்ற பள்ளிகளில் இருந்து முறையாக தனித் தோ்வா்களுக்கு தெரிவிக்கப்படும். தகவல் கிடைக்கப் பெறாதவா்கள் சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியா் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரை தொடா்பு கொண்டு தவறாமல் அறிவியல் பாட செய்முறைத் தோ்வில் பங்கேற்க வேண்டும். இல்லையெனில் எழுத் துத் தோ்வில் வெற்றி பெற்றாலும் தோ்ச்சி வழங்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *