10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செயல்முறைத் தேர்வு வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது

1 Min Read

சென்னை, ஜன.31 பத்தாம் வகுப்பு செய்முறைத் தோ்வில் தனித் தோ்வா்கள் பங்கேற்பது தொடா்பாக தோ்வுத் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இது தொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட உள்ளது. தோ் வெழுதவுள்ள மாண வா்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தோ்வு அவா்கள் பயிற்சி பெற்ற பள்ளிகளிலேயே பிப்ரவரி 25 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இதற்கிடையே பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ள தனித் தோ்வா்கள் மேற் கண்ட நாள்களில் நடை பெறவுள்ள அறிவியல் செய்முறைத் தோ்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

இந்த செய்முறைத் தோ்வு நடைபெறவுள்ள தேதி குறித்த தகவல்கள் பயிற்சி பெற்ற பள்ளிகளில் இருந்து முறையாக தனித் தோ்வா்களுக்கு தெரிவிக்கப்படும். தகவல் கிடைக்கப் பெறாதவா்கள் சார்ந்த பள்ளியின் தலைமை ஆசிரியா் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரை தொடா்பு கொண்டு தவறாமல் அறிவியல் பாட செய்முறைத் தோ்வில் பங்கேற்க வேண்டும். இல்லையெனில் எழுத் துத் தோ்வில் வெற்றி பெற்றாலும் தோ்ச்சி வழங்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *