புதுச்சேரி, ஜன.31 தமிழ்நாட்டில் ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினரிடம் சிபிசிஅய்டி காவல் துறையினர் 10 மணி நேரம் விசாரணை மேற்கொண் டனர்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவை தேர் தலின்போது, பணப் பட்டுவாடாவை தடுப்ப தற்கு தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டி ருந்தது. அப்போது சென்னை-நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்லப்பட்ட தகவ லையறிந்து, பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் அந்த ரயிலை நிறுத்தி சோதனை நடத்தினர்.
ரூ.4 கோடி பறிமுதல்
இந்த சோதனையில் சிக்கிய கணக்கில் வராத ரூ.4 கோடி பணத்தை பறி முதல் செய்தனர். இந்த பணத்தை எடுத்து வந்திருந்த 3 பேரை தாம்பரம் காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் ரூ.4 கோடி பணம் நெல்லை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டி யிட்ட நயினார் நாகேந் திரனுக்கு சொந்த மானது என்ற தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஅய்டி காவல் துறை வசம் ஒப்படைக்கப் பட்டது.
நயினார் நாகேந்திரன், பாஜக நிர்வாகி கேசவ விநாயகம் உள்பட 25 பேரை சிபிசிஅய்டி காவல்துறையினர் தங்கள் விசாரணை வளையத் துக்குள் கொண்டு வந்தனர். அழைப்பாணை அனுப்பியும் விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகு மாறு புதுச்சேரி பாஜக தலைவரும், மாநி லங்களவை உறுப்பினரு மான செல்வகணபதிக்கு சென்னை சிபிசிஅய்டி காவல்துறையினர் கடந்த அக்டோபர் மாதம் அழைப்பாணை அனுப்பி இருந்தனர். அப்போது அவர் 3 மாதம் அவகாசம் கேட்டிருந்தார்.
இந்நிலையில் அவ காசம் முடிவடைந்து அவர், சென்னை எழும் பூரில் உள்ள சிபிசிஅய்டி அலுவலகத்தில் 28.1.2025 அன்று விசாரணைக்கு ஆஜரானார். அவரி டம் சிபிசிஅய்டி காவல் துறையினர் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். விசா ரணைக்கு பின்னர் மீண்டும் அழைத்தால் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் சிபிசிஅய்டி காவல்துறை யினர் அவரை அனுப்பி வைத்துள்ளனர்.