மோசடி வழக்கில் குஜராத் மேனாள் அமைச்சருக்கு 7 ஆண்டு சிறை

1 Min Read

அகமதாபாத் நீதிமன்றம் உத்தரவு

அரசியல்

அகமதாபாத், ஜூலை 16– குஜராத் தில், 1996ஆ-ம் ஆண்டு, பாஜக அரசில் அமைச்சராக இருந்தவர் விபுல் சவுத்ரி. இவர், 2014ஆ-ம் ஆண்டு, அமுல் பால் பொருட்களை தயாரிக்கும் குஜராத் கூட்டுறவு பால் வாணிப கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். துத்சாகர் பால்பண்ணையின் தலைவராகவும் இருந்தார். 

அப்போது,மராட்டிய மாநிலத் துக்கு ரூ.22 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள கால்நடை தீவனங் களை அனுப்பி வைத்தார். ஒப்பந் தம் விடாமலும், பால்பண்ணை வாரிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றாமலும் தன்னிச்சை யாக அவர் அனுப்பி வைத்ததாக மாநில அரசு குற்றம் சாட்டியது.

எனவே, அரசுக்கு ரூ.22 கோடியே 50 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக விபுல் சவுத்ரி உள்பட 15 பேர் மீது கடந்த 2014-ஆம் ஆண்டு மெசானா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

அதைத் தொடர்ந்து இரு பதவி களில் இருந்தும் அவர் நீக்கப் பட்டார். இந்த வழக்கு, மெசானா வில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. (13.7.2023) அன்று கூடுதல் தலைமை நீதிபதி ஒய்.ஆர்.அகர்வால் தீர்ப்பு அளித்தார். விபுல் சவுத்ரி உள்பட 15 பேரும் குற்றவாளிகள் என்று கூறிய அவர், அவர்களுக்கு தலா 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தர விட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *