பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திறந்தவெளி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சில கூடாரங்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.