திருச்சியில் நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங் களின் கூட்டமைப்பு (FIRA) மாநாடு வெற்றிகரமாக நடைபெற்ற தையொட்டி மாநில பொறுப் பாளர்களான பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர்கள் வி.மோகன், ஆ.வெங்கடேசன், வா.தமிழ்பிரபாகரன் ஆகியோர் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். உடன்: திராவிடர் கழகப் பொரு ளாளர் வீ.குமரேசன். (சென்னை, 29.01.2025) ஆரணி
பகுத்தறிவாளர் கழக தோழர் மறைந்த
மு. பாண்டிய நெடுஞ்செழியன் அவர்கள் எழுதிய நூல்களுக்கு அணிந்துரை வழங்க கோரி அவரது மகள் டாக்டர்
பா. தேன்தமிழோசை அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: வடமணப்பாக்கம் வி. வெங்கட்ராமன் – முனைவர் மு.தமிழ்மொழி இணையர் இருந்தனர். (சென்னை – 28.1.2025)
பெரியார் பெருந்தொண்டர் இரா. விசயராகவன் பெரியார் உலகம் நன்கொடையாக 10,100/- ரூபாயை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் அவரது வாழ்விணையர் பேபி விசயராகவன். (சென்னை, 27.01.2025)
சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன் – சவுந்தரி நடராசன் ஆகியோரின் பெயர்த்தி க.மதிவதனி – முனைவர் கு.திருப்பதி ஆகியோரின் இணையேற்பின் மகிழ்வாக 4,500 ரூபாயை இயக்க இதழ்களுக்கு சந்தா மற்றும் நன்கொடையாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். மணமக்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். (சென்னை, 27.01.2025)