பெரியார் பாலிடெக்னிக்கில் சென்னை ஸ்வில்லிங் இந்தியா நிறுவனம் நடத்திய வளாக நேர்காணல்

Viduthalai
0 Min Read

திருச்சி,ஜன.30- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை ஸ்வில்லிங் (Zwilling) இந்தியா நிறுவனம் சார்பாக நேர்காணல் நடைபெற்றது.
28.1.2025 அன்று சென்னை ஸ்வில்லிங் இந்தியா (Zwilling India) நிறுவனத்தின் சார்பில் மனிதவள மேம்பாட்டு அலுவலர் அருண் ரங்கநாதன் இப்பாலிடெக்னிக்கில் நடைபெற்ற வளாக நேர் காணலில் கலந்து கொண்டார். நேர்காணலில் 89 மாணவர்களைப் பணிக்கு தேர்ந்தெடுத்தனர்.
பணி ஆணைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ஹேமலதா மாணவர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் இக்கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *