செய்யாறு, ஜன. 30- 26.1.2025 அன்று காலை 10.00 மணியளவில் செய்யாறு. படிகலிங்கம் மெடிக்கலில் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி செயலாளர் செ.அரவிந்த் அனைவரையும் வரவேற்றார். இளைஞரணி பொறுப்பாளர் இரா. சிவக்குமார் நிகழ்வின் தொடக்கமாக கடவுள் மறுப்பு கூறினார். நிகழ்விற்குத் தலைமையேற்று நோக்க உரையை மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி எடுத்து ரைத்தார். மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வே.மனோஜ்குமார், செய்யாறு நகர தலைவர் தி.காமராஜன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வி. வெங்கடேசன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் என்.வி.கோவிந்தன். ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் அ.இளங் கோவன், மாவட்ட செயலாளர் பொன்.சுந்தர் கருத்துரை வழங்கினார்கள்.
நிறைவாக மகளிரணி பொறுப்பாளர் வெ.தமிழ் மொழி உரையாற்றினார். நிகழ்வில் மாவட்ட இளைஞரணி தலைவர் க.வெங்கடேசன், கோ.அஜித், இளைஞரணி பி.கலையரசன். பிரதீப், பி.ஆகாஷ். விக்ரம் சரவணன். பிரசாந்த். ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக பா.நரேஷ் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
நீலகிரி புள்ளியல் ஆய்வாளர் ரா.திருநாவுக்கரசு. மாவட்ட அமைப்பாளர் ஆரணி ஏ.அசோகனின் தந்தை பெரியார் பெருந்தொண்டர் பெருங்களத்தூர் க.ஏகாம்பரம், இளைஞரணி அமைப்பாளர் ப.நரேஷின் தாயார் தேன்மொழி, பேராசிரியர் மு.தமிழ் மொழியின் தாயார் மு.இந்திராணி.மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேனாள் தலைவரும், மேனாள் ஒன்றிய இணை அமைச்சரும், ஈரோடு சட்டமன்ற உறுப்பினரும், சுயமரியாதை வீரர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக்கத்தையும் தெரிவிக்கிறது.
செய்யாறு மாவட்ட கழக இளை ஞரணி சார்பாக நகரங்கள். ஒன்றியம் ஊராட்சி, பேரூராட்சி, கிளைக் கழகங்கள், முழுவதும் கழக இலட்சியக் கொடியை ஏற்றியும், புதிய கிளைக் கழகம் அமைத்து, கழக இளைஞரணியை புதுப்பிப்பது,
செய்யாறு மாவட்டத்தில் கழக இளைஞரணி சார்பில் ஏராளமான இடங்களில் தகவல் பதாகை அமைத்தல், துண்டறிக்கை பிரச்சாரம் செய்தல், தெரு முனைப் பிரச்சாரம் செய்தல். பெரியார் பேசுகிறார் நிகழ்வினை தொடர்ச்சியாக நடத்துதல்,
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான ‘விடுதலை’ நாளேட்டை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் விதமாக மாவட்ட கழக இளைஞரணி சார்பில் அதிக அளவில் சந்தாக்களை வழங்கிடவும், பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நிதி வழங்கிடவும் முடிவு செய்யப்படுகிறது.
அறிஞர் அண்ணா நினைவு நாள். சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா. திருடர்கள் ஜாக்கிரதை வள்ளுவரையும் வள்ளலாரையும் காப்போம் என்ற தலைப்பிலும் சிறப்பு கூட்டத்தில் பிப்ரவரி 03 அன்று காஞ்சிபுரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றவிருக்கும் சிறப்பு கூட்டத்தில் செய்யாறு மாவட்ட கழக இளைஞரணி சார்பில் பெருமளவில் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 15இல் சிதம்பரத்தில் நடை பெற இருக்கும் தலைமை பொதுக்குழு கூட்டத்தில் மாவட்டம் சார்பில் பெருமளவில் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.