வெட்டிக்காடு, ஜன.29 கடந்த 25ஆம் தேதி காலை 9 மணிக்கு வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுேலஷன் பள்ளி 18ஆவது ஆண்டு விழா தமிழ்மொழி வாழ்த்துடன் தொடங்கியது. விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் உரை நிகழ்த்தினார். அடுத்து சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த திருவோணம் வட்டார கல்வி அலுவலர் பூ.சவுந்தரவல்லி, சில்லத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அய்ஸ்வர்யா பாரதி ஆகியோருக்கு தாளாளர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். சிறப்பு விருந்தினர் தனது உரையில் அக்காலத்தில் நான் படித்த போது தானாகவே அனைத்தும் அறிந்து கொண்டேன். உங்களுக்கு எதிர்கால தொழில்நுட்பம் வரை பயிற்சி அளிக்கிறார்கள், உங்கள் வெற்றி நம் நாட்டிற்கு சிறப்பானதாக இருக்கும் என்று சிறப்புரை ஆற்றினார்.
2023-2024-ஆம் கல்வியாண்டில் ஆண்டு விழாவிற்கு பிறகு நடந்த செயல்பாடுகளையும், மேலும் பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் வசதிகளையும், சாதனைகளையும் பட்டியலிட்டு பள்ளி முதல்வர் சு .சாந்தி ஆண்டறிக்கையை படித்தார். விழாவில் பள்ளியின் ஒருங் கிணைப்பாளர் டி..கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு
கல்வியில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்கள், 2023-2024 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள், 100 சதவீதம் முழு வருகை புரிந்த மாணவர்கள், தினமும் சீரான பள்ளிச் சீருடையுடன் வருகை புரிந்த மாணவர்கள், 2024-2025 ஆம் ஆண்டில் விளையாட்டில் சாதனை பெற்ற மாணவர்கள் என அனைவருக்கும் சான்றிதழ்களையும், கேடயங்களையும் வீ. அன்புராஜ் வழங்கி பாராட்டி பேசினார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த பாட ஆசிரியர்கள் 5 பேருக்கும், 10 ஆண்டுகளாக பள்ளியில் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர் ஒருவருக்கும், ஓட்டுநர் மூவருக்கும் காசோலை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
கலை நிகழ்ச்சிகள்
விழாவில் மாணவர்களின் பரதநாட்டிய நடனம் மாண வர்கள் அனைவரையும் கவர்ந்தது. வைக்கம் போராட்டம் பற்றிய இரு மொழி உரைப்பேச்சும், மாறுவேடம் மூலம் அன்னை தெரசா மற்றும் பாரதியார் கருத்துகளையும் மாண வர்கள் தத்ரூபமாக வெளிப்படுத்தினர். பெரியாரைப் பற்றிய கவிதை, பாடல், நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தமிழர் திருநாள்
தமிழர் திருநாள் சிறப்பு பற்றிய நடனமும், கைப்பேசியின் பயன்கள் பற்றிய நாடகமும், பட்டிமன்றமும் நிகழ்த்தப்பட்டு அரிய பல கருத்துகளை கண்களுக்கும், செவிகளுக்கும், மனதிற்கும் விருந்தளித்தனர். ‘‘புத்தகம் கூறும் வாசிப்பை நேசிப்போம்’’ என புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு வாசகங்களை இரு மொழிகளிலும் வழங்கினர்.
சந்திராயன் 1,3 பற்றிய செயல் திறன்களை மவுன மொழி நாடகம் மூலம் சிறப்பான மாதிரிகளை பயன்படுத்தி அருமையாக நிகழ்த்தி அறிவியல் மனப்பான்மையை வெளிக்கொணர்ந்தனர்.
செயற்கை நுண்ணறிவின் செயல்பாடுகள், பணிகள், பயன்கள் பற்றிய நாடகமும் உரைகளும் அனைவரின் பாராட் டுதலைப் பெற்றது.
செயற்கை நுண்ணறிவு கற்பித்தல் எந்நிலையில் கற்பிக் கப்படுகிறது, அவற்றின் செயல்பாடுகள் மாணவர்களுக்கு எவ்வகையில் பயனளிக்கிறது என்பதனை நேரடியாக மாணவர்களிடம் தாளாளர் கேட்டறிந்தார். செயற்கை நுண்ணறிவு பயிற்சியாளர் இலக்கியாவிற்கு பள்ளி தாளாளர் பயனாடை அணிவித்து சிறப்பித்தார்
இறுதியாக வருகை புரிந்த அனைவரையும் பாராட்டி நன்றியுரை கணித ஆசிரியர் மா.ரேகா வழங்க, இனிதே விழா நாட்டுப்பண்ணுடன் நிறைவு பெற்றது.