பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் நாள் உறுதிமொழியேற்பு

1 Min Read

திருச்சி, ஜன.29- தேசிய வாக்காளர் நாளான 25.1.2025 அன்று காலை 11.30 மணியளவில் சென்னை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அறிவுறுத்தலின்படியும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை வழிகாட்டுதலின்படியும் மாணவர்கள் தேசிய வாக்காளர் நாள் உறுதிமொழியேற்றனர்.
முன்னதாக நாட்டு நலப்பணித்திட்டத்தின் மூலம் வாக்காளர் நாளின் முக்கியத்துவம் குறித்தும் மதம், இனம், ஜாதி, மொழி கடந்து மற்றவர்களின் வற்புறுத்தல்கள் ஏதுமின்றி வாக்களிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் மத்தியில் வலியுறுத்தப்பட்டது.

நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் பேரா. அ.ஜெசிமா பேகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழியேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *