27.1.2025 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-142, மேற்கு சைதாப்பேட்டை, வி.வி.கோயில் தெருவில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.4.51 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் கட்டும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், மண்டலக் குழுத் தலைவர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, ஆர். துரைராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.