தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் விண்ணப்பங்கள் சரிபார்ப்பு துவக்கம்

1 Min Read

கோவை, ஜூலை 16 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நடப்பாண்டு இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான இணையதள வழி கலந் தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டின்படி, அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நாளை (17.7.2023) நடைபெற உள்ளது.தொழில் முறைக் கல்வி பாடப்பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு சான் றிதழ் சரிபார்ப்பு நாளை மறுநாள் (18.7.2023) நடக்கிறது.

பொதுப்பிரிவினருக்கான இணையவழி முதல்கட்ட கலந்தாய்வு நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. இதில் பங்கேற்பவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 20-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை நடக்கிறது. பொதுப்பிரிவினருக்கான நகர்வு முறை மற்றும் இணையதள வழி 2-ஆம் கட்ட கலந்தாய்வு வருகிற 26 மற்றும் 27-ஆம் தேதிகளில் நடக்கிறது. பொதுப்பிரிவில் இணையதள வழி 2-ஆம் கட்ட கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 28 மற்றும் 29-ந்தேதி நடக்கிறது. கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *