லக்னோ, ஜன.28 உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் இன்று (28.1.2025) ஆன்மிக விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. அப்போது திடீரென்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மரத்தால் ஆன மேடை சரிந்து விழுந்தது.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் 50–க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும், காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஆன்மிக விழா: 5 பேர் உயிரிழப்பு!
Leave a Comment