2023 மே-11 அன்று ஈரோட்டில் நடைபெற்ற கழகப் பொதுக்குழு கூட்டத்தில், பெரியாரியல் பயிற்சிப் பட்டறையைத் தமிழ்நாடு எங்கும் நடத்த வேண்டும் எனத் தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து, அந்த மாதம் மே-24 ஆம் தேதியே சென்னை பெரியார் திடலில் கழக மகளிர் அணி,மகளிர் பாசறை சார்பில் முதல் பயிற்சி வகுப்புத் தொடங்கியது.
பின்னர் ஜூன் 6 ஆம் தேதி அறந்தாங்கி கழக மாவட்டம் கீரமங்கலத்தை தொடர்ந்து, 26.01.2025 அன்று பழனி கழக மாவட்டம் கோரிக்கடவில் நடந்தது வரை 49 பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் முடிந்துள்ளன. இதில் தமிழ்நாட்டைக் கடந்து புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மும்பையிலும் பயிற்சிப் பட்டறைகள் நடந்துள்ளன.
இவற்றில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடந்து வரும் குற்றாலம் மற்றும் கோபிசெட்டிபாளையம் ஆசனூரில் நடைபெற்ற 2 நாட்கள் பயற்சிப் பட்டறையில் தமிழர் தலைவர் பங்கேற்று வகுப்புகள் எடுத்தார்கள். மாவட்ட வாரியாக நடைபெற்ற ஒரு நாள் பயிற்சி வகுப்புகளில் ஆசிரியர் அவர்களின் காணொலி உரைகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தமது 50 ஆவது எண்ணிக்கையைத் தொட இருக்கிறது. அந்த வகையில் பிப்ரவரி 9 ஆம் தேதி வடசென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் 50 ஆவது ஒருநாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற இருக்கிறது. இதில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்று மாணவர்கள், இளைஞர்களுக்கு வகுப்புகள் எடுக்க இருக்கிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!
இந்த சிறப்பான வாய்ப்பைப் பயன்படுத்தி வட சென்னை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் அதிக அளவு பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை கழகப் பொறுப்பாளர்கள் செய்திருமாறு கனிவுடன் வேண்டுகிறோம்.
குறிப்பு : விரிவான பட்டியல் விரைவில் ‘விடுதலை’ யில் வெளியிடப்படும்.
– இரா.ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பெரியாரியல் பயிற்சி பட்டறை பொறுப்பாளர்
தொடர்புக்கு: 9842598743