திமுக எம்பி எஸ்.கல்யாண சுந்தரம், கும்பகோணம் எம்எல்ஏ கே.அன்பழகன், துணை மேயர் சுபா தமிழகன் மீது கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை தஞ்சை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் விசாரணை முடிந்ததால் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அப்போது 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தது.