ஈப்போ, ஜன. 28- மலேசியா வில் ஈப்போ மாநகரத்தில் பெரியார் சிந்தனையாளர்கள் மற்றும் பெரியார் பன்னாட்டு அமைப்பு தோழர்கள் இணைந்து பொங்கல் விழா தமிழர் திருநாள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார்கள். அண்மையில் காலமான மலேசிய திராவிடக் கழகத்தின் தலைவர் டத்தோ சா.தா.அண்ணாமலை மற்றும் ஈப்போ தமிழ் தொண்டர் டேவிட் அவர்களுக்கு ஒரு நிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தோழர்கள் மா லட்சுமணன், த.பரமசிவம், விந்தை குமரன் கெ. வாசு, முல்லைச் செல் வன், த.சி.முனியரசன், எலன் ஆகி யோர் பொங்கல் பற்றியும் திராவிட இயக்கத்தின் பணிகள் பற்றியும் உரை நிகழ்த்தினார்கள்.
கவிஞர்கள் சா.சண்முகம், முத்துப்பாண்டி பெரியார் மற்றும் பொங்கல் விழா கவிதைகளை பாடினார்கள். இறுதியாக பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் மு.கோவிந்தசாமி 10 மூத்த தோழர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கி சிறப்பு உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் ஏறக்குறைய நூற்றுக்கு மேற்பட்ட பெரியார் சிந்தனையாளர்கள் கலந்து சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியின் இறுதி யில் தேநீர் விருந்து நடைபெற்றது.
எதிர்வரும் மாதத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் பொங்கல் ஒன்று கூடும் நிகழ்ச்சி நடைபெறும்.