கோவை, ஜன. 28- கோவை கழக காப்பாளர் ரங்கநாயகி அம்மையார் படத்திறப்பு நினைவேந்தல் கூட்டம் பீளமேடு பகுதி யில் 26.01.2025 காலை 11 மணி அளவில் நடை பெற்றது.
நிகழ்ச்சியில் கோவை மாவட்ட கழக தலைவர் ம.சந்திரசேகர் தலைமை ஏற்று படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி நினைவேந்தல் உரையாற்றினார்.
தொடர்ந்து பொதுக் குழு உறுப்பினர் பழ அன்பரசு, மாநகர செயலாளர் புலியகுளம் க.வீரமணி ஆகியோர் உரையாற்றினார்கள்.
நிகழ்ச்சியில் மாநகர தலைவர் தி க செந்தில் நாதன், விடுதலை வாசகர் வட்டம் கு வெ கி செந்தில், மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, கவிதா, திராவிடமணி, கவி கிருஷ்ணன், கிருஷ்ணன் மூர்த்தி, லூகாஸ் பீட்டர், ஆனந்தராஜ், குமார், சிவகுமார், ஆவின் சுப்பையா, குரு, தமிழ்முரசு, பெயிண்டர் குமார், வெற்றி செல்வன், சிவராஜ், மற்றும் ஜிடி நாயுடு நினைவு பெரியார் படிப்பகம் & பெரியார் புத்தக நிலைய காப்பாளர் அ.மு.ராஜா உள்ளிட்ட கழக தோழர்கள் உறவி னர்கள் நண்பர்கள் என ஏராளமானோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியை வசந்தம் இராமச்சந்திரன் ரங்கநாயகி அம்மையார் குடும்பத்தினர் மகன் – மருமகள் ஆர்.தாமோதரன் –டி.தனலட்சுமி, மகள்-மருமகன் ஜெ. இந்திராணி, கே.ஜெகதீசன், கோவை, டி. ஜெயமணி, உடுமலை பேட்டை, ஆர்.ராதா மணி –ஆர்.ராஜன், உடுமலை பேட்டை, மற்றும் பேரன்கள் பேத்திகள் உள்ளிட்ட உறவினர்கள் குடும்பத்தினர் அனைவ ரும் மிக சிறப்பாக ஏற் பாடுகளை செய்து நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.