முத்தரசநல்லூர், ஜன. 28- லால்குடி மாவட்ட செயலாளர் அ.அங்கமுத்து மகன் மறைந்த அ.நாத்திகமணி படத்திறப்பு மற்றும் மருத்துவ ஆயா ஆ.சாமியம்மாள் 25 ஆவது நினைவுநாள் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி திருச்சி முத்தரசநல்லூர், மண்டபம் தோப்பு, புது அக்ரஹாரத்திலுள்ள அவரது இல்லத்தில் ஜன.26 ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு இலால்குடி மாவட்ட செயலாளர் அ.அங்கமுத்து வரவேற்புரையாற்றினார். பெரியார் வீரவிளையாட்டுக்கழக மாநில தலைவர் ப.சுப்ரமணியன் தலைமை வகித்து அ.நாத்திகமணி மற்றும் அ.சாமியம்மாள் படத்தினை திறந்து வைத்தார். திரா விடர் கழக காப்பாளர் ப.ஆல்பர்ட் முன் னிலை வகித்தார்.
தலைமைக்கழக பேச்சாளர் வழக்கு ரைஞர் பூவை. புலிகேசி நினைவேந்தல் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் இலால்குடி மாவட்ட துணை தலைவர் க.ஆசைதம்பி, மாவட்ட துணை செயலாளர் வெ.சித்தார்த்தன், மாவட்ட ப.க. அமைப்பாளர் பாலசுப்ர மணியன், மாவட்ட ப.க துணை தலைவர் பாபுராஜ், மண்ணச்சநல்லூர் ஒன்றிய தலைவர் கு.பொ.பெரியசாமி, மண்ணச்சநல்லூர் நகர தலைவர் முத்து சாமி, புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் சி.வீரமணி, லால்குடி ஒன்றிய தலைவர் பிச்சைமணி, செயலாளர் மணிவாசகம், நெ.1 டோல்கேட் பகுதி தலைவர் போஸ்டல் ராமசாமி, துறையூர் மாவட்ட தலைவர் மணிவண்ணன், மாநில ப.க. அமைப்பாளர் துறையூர் சண்முகம், இலால்குடி மாவட்ட ப.க. தலைவர் அன்புராஜா, பகுத்தறிவு ஆசிரியர் அணி மு.செல்வி, திருச்சி மாவட்ட மகளிரணி தலைவர் சாந்தி, திருச்சி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் மகாமணி, திருச்சி மாவட்ட முன்னாள் செயலாளர் மோகன்தாஸ், துறையூர் மாவட்ட துணைத் தலைவர் முசிறி ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக புள்ளம்பாடி நகர செயலாளர் பொற்செழியன் நன்றி கூறினார்.