ஆலங்குடி, ஜன. 28- அறந்தாங்கி மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம் 27.1.2025 அன்று மாலை 6 மணிக்கு ஆலங் குடியில் நடைபெற்றது. மாவட்டத் தலை வர் க.மாரிமுத்து தலைமை வகித்தார்.
அறிவாசான் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார். தமிழர் தலைவர் ஆகியோரின் பேரன்பை பெற்றவர் சுயமரியாதைச் சுடரொளி பெ.இராவணன். அவரது படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றவுள்ள சிறப்பினையும், தமிழர் தலைவர் ஆற்றிவரும் அருந்தொண்டினையும் விளக்கி மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன்தொடக்கவுரையாற்றினார்.
பெரியார் வீர விளையாட்டுக்கழக மாநில அமைப்பாளர் க.முத்து, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் மாவட்ட கழக செயலாளர் செகதை.ச.குமார், மாவட்ட துணைத்தலைவர் குப்பகுடி ஆர்.இளங்கோ, ப.மகாராசா, மாவட்ட துணைச்செயலாளர் மகாராசா, மாவட்ட ப.க.செயலாளர் க.வீரையா, மாவட்ட ப.க.துணைச்செயலாளர் கருணாகரன். புதுக்கோட்டைமாவட்ட ப.க.தலைவர் தர்மசேகர் கழக சொற்பொழிவாளர் மாங்காடு சுப.மணியரசன் இரா.மேகநாதன் புதுக்கோட்டை விடுதி திமுகசெல்வம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
தீர்மானங்கள்
14.2.2025 அன்று சுயமரியாதைச் சுடரொளி புதுக்கோட்டை விடுதி பெ.இராவணன் அவர்களது படத்திறப்பு நிகழ்ச்சிக்கு தேதியளித்து சிறப்பித்துள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
14.2.2025 அன்று காலை 10 மணிக்கு ஆலங்குடி மங்களாபுரம்அரிமளம்விலக்கு கே.எம்.பி.திருமண அரங்கில் சுயமரியாதைச்சுடரொளி புதுக்கோட்டை விடுதி பெ.இராவணன் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அறந்தாங்கி மாவட்டக்கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.