சூரத்தில், ரூ.15,000 பள்ளி கட்டணத்திற்காக அவமானப்படுத்தப்பட்ட 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். பள்ளி நிர்வாகம், வகுப்பறை, ஆய்வறையில் தனியாக தரையில் அமர வைத்து கொடுமைப்படுத்தியதால், சக மாணவர்கள் முன்பு கூனிக் குறுகிய மாணவி கண்ணீர் சிந்திய காட்சிப் பதிவை பகிரும் பலரும், கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத உங்களுக்கு பள்ளி நடத்தும் உரிமத்தை யார் கொடுத்தது என கேள்வி எழுப்பி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?