பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை – தமிழ்நாடு தான் முதலிடம்!

1 Min Read

கனிமொழி எம்.பி. பெருமிதம்

அரசியல்

சென்னை,  ஜூலை 17– பணிபுரியும் பெண்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக ஃபிக்கி பெண்கள் அமைப்பு சார்பில் சென்னையில் நேற்று (16.7.2023) நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

பெண்கள் தொழில்துறையில் முன்னேற்றம் அடையும் நோக்கில் ஃபிக்கி (FICCI) பெண்கள் அமைப்பு 1993ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பெண்களின் திறன் மேம்பாடு, பள்ளி இடைநிற்றல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தல், மாற்றுத் திறனாளி பெண்கள் வேலைவாய்ப்பு போன்ற முன் முயற்சிகளை இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இதில் 550 உறுப்பினர்கள் உள்ளனர்.

இதன் 30ஆவது ஆண்டு விழாவையொட்டி ‘ஃபிக்கி பெண்கள் அமைப்பின் பெருமை (Pride of FLO)’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் மக்களவை உறுப்பினர் கனிமொழி பங்கேற்று நூலை வெளியிட்டார். பின்னர் அவர் பேசிய தாவது:

பெண்களின் தியாகங்கள் நாட்டில் மதிக்கப்படுவ தில்லை. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளது. ஆனால், அவற்றை அவர்கள் போராடியே பெற வேண்டியுள்ளது. அவர்களால் அவர்களின் சொத்துகளை அணுக முடியவில்லை. இதனால்தான் அரசியலிலும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால் இந்த அமைப்பு பெண்கள் முன்னேறுவதற்கான
களத்தை 30 ஆண்டுகளாக அமைத்து கொடுத்து, அவர்களை முன்னேற்றி, சிறந்த சேவையாற்றி வருகிறது. பணிபுரியும் பெண்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

ஆனால் இந்திய அளவில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை பின்தங்கியே உள்ளது. தேசிய அளவில் பெண்கள் பெறும் சராசரி பிஎச்டி பட்டங்களின் எண்ணிக் கையைவிட, தமிழ்நாட்டில் பிஎச்டி பட்டம் பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஃபிக்கி தமிழ்நாடு தலைவர் 

ஜி.எஸ்.கே.வேலு, ஃபிக்கி பெண்கள் அமைப்பின் தேசிய தலைவர் சுதா ஷிவ்குமார், சென்னைப் பிரிவு தலைவர் ராஜி ராஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *