மேனாள் முதலமைச்சர் கலைஞரின் சிறப்பு உதவியாளராக இருந்த முத்துவாசிக்கு தமிழ்நாடு அரசு கலைஞர் விருதினை வழங்கியது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை யாக ரூ.10,000 வழங்கினார். நன்றி. (சென்னை, 13.1.2025).
பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக 10,000/- ரூபாயை கவிஞர் கா.முருகையன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன், தமிழ்நாடு மூதறிஞர் குழு பொருளாளர் த.கு.திவாகரன் (சென்னை, 25.1.2025)
திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய சுயமரியாதை இயக்க வரலாறு தொகுதி 2 நூலினை பதிப்பாளர் தி.சிற்றரசு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி (சென்னை, 25.1.2025)
சென்னை அய்.அய்.டி. வளாகத்தில் உள்ள ‘வனவாணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி’யில் முதலாம் வகுப்பு படிக்கும் சென்னையைச் சேர்ந்த இராமசாமி மாதவன் – ரஞ்சிதா ஆகியோரின் மகள் (வயது-6) இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்துச் சாதனைப் புரிந்துள்ளார். தமிழ் மொழியின் 247 மொத்த தமிழ் எழுத்துக்களையும் ஒரு நிமிடம் 14 நொடிகளில் பாடல் வடிவில் சொல்லி இச்சாதனையைப் புரிந்துள்ளார். இந்நிறுவனத்தின் சார்பில் ஓர் சான்றிதழ், மெடல், ஒரு பேனா மற்றும் பேட்ச் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்த 6வயது சிறுமி ர.மா. தமிழினி தமிழர் தலைவரிடம் பதக்கத்தைக் காண்பித்தார். தமிழர் தலைவர் தமிழினிக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.