பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் சிறப்புரை!
விழுப்புரம், ஜன. 27- விழுப்புரம் வடகிழக்கு பகுதி விடுதலை சிறுத்தை கள் சார்பில் மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டுப்பாதை அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் 25.1.2025 அன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மாவட்ட செயலாளர் வீர பொன்னிவளவன் தலைமையில் மு பால்வண்ணன் முன்னிலையில் நடைபெற்றது விடுதலை சிறுத்தைகள் மகளிர் அணி மகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார்.
பழங்குடியின இருளர் சமூக பாதுகாப்பு அமைப்பு நிறுவனர் பேராசிரியர் பிரபா கல்வி மணி விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பின ருமான முனைவர் துரை ரவிக்குமார் ஆகியோர் உரையாற்றிய பின் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக மொழிப்போர் ஈகியர்படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு வீரவணக்கம் தெரிவிக்கப்பட்டது. அண்மையில் முனைவர் துரை ரவிக்குமாருக்கு தமிழ்நாடு அரசு அண்ணல் அம் பேத்கர் விருது வழங்கியதை பாராட்டி – கழகப் பொதுச் செயலாளர் முனை வர் துரை சந்திரசேகரன் பட்டாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். கழகப் பொதுச் செயலாளர் தமது சிறப்புரையில்,”1938 நடைபெற்ற முதல் மொழி உரிமைப் போர் போராட்டத்தை முன்னின்று நடத்திய தந்தை பெரியாரின் தமிழ் எழுச்சிக்கான பங்கு பணிகள் 1948 முதல் 1953 வரை நடைபெற்ற இரண்டாவது மொழிப்போர் தந்தை பெரியார் கட்டளையை ஏற்று திராவிடர் கழகத்தினர் நாடெங்கும் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள பெயர்ப் பலகையில் இந்திய எழுத்துகளை தார் பூசி அழித்து உணர்ச்சியை தூண்டிய போராட்டம் அதை எதிர்த்து கருப்புக்கு மறுப்பு என்ற பெயரால் தமிழுக்கு எதிராக இந்திக்கு ஆதரவாக செயல்பட்டவர் தான் ம. பொ. சி.. என்பதையும் அந்தப் போராட்டத்தின் விளைவாக தொடர்வண்டி நிலையத்தின் பெயர் பலகையில் மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ் முதலிடத்திற்கு வந்ததையும் நினைவு கூர்ந்து பேசினார். மூன்றாம் கட்ட மொழிப்போர் மாணவர்களால் 1965இல் நடத்தப் பட்ட போராட்டமாகும். இந்த போராட்டத்தில் தான் ராணுவம் போராட்டக்காரர்களை ஒடுக்க அழைக்கப்பட்டது. ஏராளமானோர் காவல் துறை மற்றும் ராணுவத்தின் தாக்குதலுக்கும் துப்பாக்கி குண்டுக்கும் பலியானார்கள்.
1938 முதல் மொழி உரிமை போரில் நடராசன் .தாளமுத்து ஆகிய இருவரை சிறையிலேயே இழந்தோம்.
1965 மொழிப் போரில் கீழப்பழுவூர் சின்னசாமி கோடம்பாக்கம் சிவ லிங்கம் விருகம்பாக்கம் அரங்கநாதன் கீரனூர் முத்து மாணவர் ராஜேந்தி ரன் சத்தியமங்கலம் முத்து அய்யம் பாளையம் வீரப்பன் விராலிமலை சண்முகம் பீளமேடு தண்டபாணி மயிலாடுதுறை சாரங்கபாணி ஆகியோர் துப்பாக்கி குண்டுக்கும், தங்கள் உடலை பெட்ரோலுக்கும், மண்எண்ணைக்கும் தீக்கு இரையாக்கி கொண்டும் இந்தி ஒழிக தமிழ் வாழ்க என்று முழக்கமிட்டு உயிர் நீத்த ஈகியர்கள் ஆவார்கள். அவர்களுக்கு வீரவணக்கம் தெரிவிக்க கூடிய வகையில் கடந்து போன வரலாற்றை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் நடத்தப்படும் நிகழ்வுதான் இந்த பொதுக்கூட்டம் தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் உள் ளிட்ட பல்வேறு கட்சிகளால் இன்று ( 25.1.2025) நாடெங்கும் ஈகியர் தினம் முன்னெடுக்கப்படுகிறது.”என்று தமது உரையில் குறிப்பிட்டார்.
விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் முன்னணி நிர்வாகிகளான செல்வம், பேராசிரியர் கல்பனா, மலைச்சாமி, வள்ளுவன், திலீபன், எழில்மாறன், இரணியன் ஆகியோரும் திராவிடர் கழக புதுவை மாநில தலைவர் சிவ வீரமணி, குப்புசாமி, பழனி, தமிழ்ச்செல்வன், சிவராசன், ராசா, தேவகி, மூலக்குளம் பன்னீர் ராகப்பிரியா, அருள் ஆகிய கழக தோழர்களும் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர். மாநாடு போல் நிகழ்வு அமைந்தது.