சென்னை, ஜன. 27–- வரும் 1ஆம் தேதியிலிருந்து முதல் 1.8 கி.மீ.-க்கு ரூ.50 வசூலிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.
அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி.ஏ.ஜாஹீர் ஹுசைன் கூறியதாவது:
கடந்த 12 ஆண்டு களாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப் படாததால், ஓட்டுநர்கள் சார்பில் பிப். 1ஆம் தேதி முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும்.
அதன்படி, முதல் 1.8 கி.மீ-க்கு ரூ.50, கூடுதல் கிமீ-க்கு ரூ.18, காத்திருப்பு கட்டணம் ரூ.1.5 என்ற வகையில் வசூலிக்கப்படும்.
இந்த கட்டணத்தின் படியே தற்போது கிளாம்பாக்கத்திலிருந்து ப்ரீபெய்டு ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
இந்த கட்டணத்தை உரிமைக் குரல் உள்ளிட்ட கூட்டமைப்பு சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பின்பற்றுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்