தமிழ்நாட்டை ஒன்றிய அரசு புறக்கணிப்பதா?

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு

அரசியல்

திண்டுக்கல்,ஜூலை17– ”தமிழ்நாட்டை ஒட்டு மொத் தமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிக்கிறது,” என, காங்., மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

திண்டுக்கல்லில் நேற்று (16.7.2023) அவர் கூறிய தாவது:

காமராஜர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதைவிட,வேறு வகையில் அவருக்கு மரியாதை செய்ய முடியாது. தொழில் துறை, அணைக்கட்டுகள், விவசாய மேம்பாடு, அனைத்து கிராமங்களிலும் கல்வி என, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் காமராஜர். ஒன்றியத்தில் 9 ஆண்டு கால பா.ஜ.க.ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு ஒரு புதிய திட்டத்தை கூட கொடுக்கவில்லை. எல்லா திட்டங் களுமே வட மாநிலங்களுக்கு தான். அவற்றின் வளர்ச் சிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் நடைபெறுவது எல்லாம் ஏற்கெனவே தொடங்கப்பட்ட பணிகள்தான். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி ஏழு ஆண்டுகள் ஆகிறது. இதுவரை சுற்றுச்சுவர் மட் டுமே இருக்கிறது. அதோடு தொடங்கப்பட்ட மற்ற மாநிலங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடிவு பெற்றுவிட்டன.

தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிக்கிறது என்பது வெளிப்படையாக தெரி கிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி, மொரிசீயஸ் தீவில் பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டுகிறார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத வரை அவர் குற்றவாளி கிடையாது. பொது சிவில் சட் டத்தை நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சிகள் மட்டு மின்றி, பொதுமக்களும் எதிர்க்கின்றனர்.

பல மதங்கள், ஜாதிகள், மொழிகள் கொண்ட இந்தி யாவில் ஒரே சட்டம் என்பது சாத்தியமில்லை.  -இவ்வாறு அவர் கூறினார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *