டில்லியில் திமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தமிழ்நாட்டின் மீது விரோதப் போக்கை ஒன்றிய அரசு கடைப்பிடித்து வருவதாக விமர்சித்தார். மேலும், ஹிந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து டில்லியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், திமுக மாணவரணியும் மாபெரும் போராட்டத்தை நடத்துவார்கள் எனவும் அறிவித்தார்.