மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகக் கூடாது! – ஆட்சியர் அறிவுரை

1 Min Read

கன்னியாகுமரி,ஜன.26- மாணவ, மாணவிகள் இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாகக் கூடாது என மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அறிவுறுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம், பார்வதிபுரம், ஆளூா் ஆகிய இடங்களில் உள்ள அரசு தொடக்க, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியா் 23.1.2025 அன்று சந்தித்து அவா்களுடன் கலந்துரையாடினார்.

மாணவ, மாணவிகளிடம் அவா் கூறியதாவது:
பள்ளி இறுதித் தோ்வை எதிர்கொள்ள காத்திருக்கும் மாணவ, மாணவிகள் முழு நம்பிக்கையுடன் தொடா்ந்து பயின்று சிறந்த மதிப்பெண்கள் பெற முயற்சிக்க வேண்டும்.
பள்ளிக்கு தவறாமல் வந்தால் மட்டுமே உயா்நிலையை அடைய முடியும். இணையதள விளையாட்டுகளுக்கு அடிமை யாகாமல் கற்பதை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார் அவா்.
இதைத் தொடா்ந்து, பார்வதிபுரம் அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ததோடு, உணவின் சுவை குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தார்.

குறைதீா் முகாம்
கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் 24.1.2025 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமை வகித்து, மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை அருகில் சென்று பெற்றுக் கொண்டார்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பட்டியலிட்ட அவா், மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சேக்அப்துல்காதா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தினேஷ், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சசி, மாற்றுத்திறனாளிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *