காவேரிப்பட்டிணம், ஜன. 26- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி துணைச் செயலாளர் காவேரிப்பட்டிணம் காந்தி நகர் பூ. இராசேந்திரபாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய பொறுப் பாளர் பூ.இராஜேஷ் (எ) புலி ஆகியோர்களின் தாயாரும், பூங்காவனம் அவர்களின் வாழ்விணை யருமான செயலட்சுமி 24.1.2025 அதிகாலை1.30 மணியாளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது மறைவு செய்தி அறிந்து கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் மாவட்டத் துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மாவட்ட விவசாயணித் தலைவர் இல.ஆறுமுகம், ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெ.புகழேந்தி, ஒன்றிய கழக மேனாள் அமைப்பாளர் சி.இராசா, கிருட்டிணகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, மாநில ப.க.துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், மத்தூர் ஒன்றியத் தலைவர் கி.முருகேசன், துணைத் தலைவர் சா.தனஞ்செயன் உள்பட கழகப் பொறுப் பாளர்களும், தோழர்களும் கலந்துக் கொண்டு மாலை அணிவித்து இறுதி மரி யாதை செலுத்தினர்.
காவேரிப்பட்டணம் (கிழக்கு) ஒன்றிய தி.மு.க. செயலாளர் க.மகேந்திரன், அமைப்புச்சாரா ஓட்டுநர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கே.எஸ்.செந்தில்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் கி. கோவேந்தன், மய்ய மாவட்டச் செயலா ளர் அ.மாதேஷ், தொகுதி செயலாளர் த.தியாகு, தமிழ்மணி, காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர்கள் பெ.சசிகுமார், திருமுருகன், ஒன்றிய பொருளாளர் இரகு தேவராஜ் உள்பட தி.க., திமுக, விசிக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்துக் கொண்டு மாலை அணி வித்து இறுதி மரியாதை செலுத்தினர்.