செயலட்சுமி அம்மாள் மறைவு கழகத் தோழர்கள் மரியாதை

1 Min Read

காவேரிப்பட்டிணம், ஜன. 26- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி துணைச் செயலாளர் காவேரிப்பட்டிணம் காந்தி நகர் பூ. இராசேந்திரபாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய பொறுப் பாளர் பூ.இராஜேஷ் (எ) புலி ஆகியோர்களின் தாயாரும், பூங்காவனம் அவர்களின் வாழ்விணை யருமான செயலட்சுமி 24.1.2025 அதிகாலை1.30 மணியாளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது மறைவு செய்தி அறிந்து கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் மாவட்டத் துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மாவட்ட விவசாயணித் தலைவர் இல.ஆறுமுகம், ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெ.புகழேந்தி, ஒன்றிய கழக மேனாள் அமைப்பாளர் சி.இராசா, கிருட்டிணகிரி ஒன்றியத் தலைவர் த.மாது, மாநில ப.க.துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், மத்தூர் ஒன்றியத் தலைவர் கி.முருகேசன், துணைத் தலைவர் சா.தனஞ்செயன் உள்பட கழகப் பொறுப் பாளர்களும், தோழர்களும் கலந்துக் கொண்டு மாலை அணிவித்து இறுதி மரி யாதை செலுத்தினர்.

காவேரிப்பட்டணம் (கிழக்கு) ஒன்றிய தி.மு.க. செயலாளர் க.மகேந்திரன், அமைப்புச்சாரா ஓட்டுநர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கே.எஸ்.செந்தில்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் கி. கோவேந்தன், மய்ய மாவட்டச் செயலா ளர் அ.மாதேஷ், தொகுதி செயலாளர் த.தியாகு, தமிழ்மணி, காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர்கள் பெ.சசிகுமார், திருமுருகன், ஒன்றிய பொருளாளர் இரகு தேவராஜ் உள்பட தி.க., திமுக, விசிக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்துக் கொண்டு மாலை அணி வித்து இறுதி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *