மதுரை, ஜன. 26- 25-01-2025 சனி காலை 10.00 மணி முதல் மாலை 5.30மணி வரை மதுரை தல்லாகுளம் காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி தொல்காப்பியர் அரங்கத்தில் பெரியாரியல் பயிற்சி பட்டறை திராவிடர் கழக வழக்குரைஞர் அணி சார்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடக்க விழா நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் வழக்கு ரைஞர் த.வீரசேகரன் தலைமை ஏற்று உரையாற்றினார்
திராவிடர் கழகம் வழக்குரைஞரணி துணை செயலாளர் வழக்குரைஞர் கணேசன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
வழக்குரைஞரணி மாநில இணைச் செயலாளர் வழக்குரைஞர் வீரமரத்தினி, திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் மதுரை வே.செல்வம், தே.எடிசன்ராஜா, வழக்குரைஞரணி மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் கரூர் ராஜசேகரன் மதுரை மாவட்ட தலைவர் முருகானந்தம் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் எரிமலை மதுரை ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
திராவிடர் கழக வழக்குரைஞரணி செய லாளர் வழக்குரைஞர் மு. சித்தார்த்தன் பயிற்சிப் பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு
பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநில தலைவர் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி மா.அழகிரிசாமி தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் முதல் வகுப்பினை நடத்தினார்.
சமூக நீதி வரலாறு என்ற தலைப்பில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேரு அவர்கள் வகுப்பெடுத்தார்.
இந்திய அரசமைப்புச் சட்டமும் அறநிலையத்துறை சட்டமும் என்ற தலைப்பிலும் பெரியாரின் பெண்ணு ரிமை சிந்தனைகள் என்ற தலைப்பிலும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சே.மெ.மதிவதனி வகுப் பெடுத்தார்,
பெரியார் மீதான அவதூறுகளுக்கு பதிலடி என்ற தலைப்பில் கழக துணை பொது செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் வகுப்பெடுத்தார்.
பேய் ஆடுதல் சாமி ஆடுதல்
பேய் ஆடுதல் சாமி ஆடுதல் ஒரு அறிவியல் விளக்கம் என்ற தலைப்பில் மருத்துவர் இரா. கவுதமன் வகுபெடுத்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள் என்ற தலைப்பில் பேராசிரியர் நம். சீனிவாசன் வகுப்பெடுத்தார்.
கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உரை காணொலியில் ஒளிபரப்பப்பட்டது.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப் பாளர், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் பாராட்டுரை வழங்கி பயிற்சிப் பட்டறையை ஒருங்கிணைத்து நடத்தினார்.
மாணவர்களுக்குப் பரிசு
வகுப்பை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுத்த மாணவர்கள் முதல் பரிசு கா.இலக்கியா, இரண்டாவது பரிசு மா.வெண்மாறன், மூன்றாவது பரிசு ச.சகாமரன் தலா 2000,1000, 500 ரொக்கமும் புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டது
சிறப்பு பரிசாக ரா.மணிகண்டன், ரா. திருமுருகன், ஏ.கே.அபிநயா,கா. முத்து ராஜா, புவனேஷ்,இ.சவரி கார்த்திக், சுபநிதி சுப்பிரமணி ஆகியோருக்கு தலா 500 ரொக்கமும் புத்தகங்களும் பரிசாக வழங்கப்பட்டன. பயிற்சி பட்டறையில் மொத்தம் 113 மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர் இதில் ஆண்கள் 85 பெண்கள் 28. பள்ளி மாணவர்கள் 42 கல்லூரி மாணவர்கள் 60 பொதுவானவர்கள் 11. பங்கு பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி சிறப் பிக்கப்பட்டது
மாணவர்கள் வருகைக்கு
துணை நின்றவர்கள்
மதுரை உயர் நீதிமன்ற வழக்குரை ஞர்கள் பா.கலையரசி பாரதி, வே. சுஜாதா சித்தார்த்தன். பாண்டிபிரியா, இளையவளவன்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் மணி கண்டன், வெங்கடேசன்.
முகாம் சிறப்பாக நடைபெற துணை நின்றவர்கள்
மதுரை உயர் நீதிமன்றக் கூடுதல் தலைமை வழக்குரைஞர் இரா.பாஸ்கரன், கூடுதல் அரசு வழக்குரைஞர் காசு.செல்வகணேஷ், உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் மோ.ஜெகதீச பாண்டியன், வினோத்
வருகை தந்து சிறப்பித்த மதுரை மாவட்ட வழக்குரைஞர் சங்க செயலாளர் வழக்குரைஞர் எஸ்.மோகன்குமார், வழக் குரைஞர் சங்க செயலாளர் பாஸ்கரன், மதிமுக வழக்கறிஞர் ஆசைத்தம்பி ஆகியோருக்கு பயனாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.
மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், மாவட்ட செயலாளர் இராலீ.சுரேஷ், மாவட்ட துணை தலைவர் நா.முருகேசன், மாவட்ட துணை தலைவர் இரா.திருப்பதி துணை செயலாளர் க.சிவா, தோழர்கள் மு.மாரிமுத்து, பா.சடகோபன், அழகுப் பாண்டி, நிழற்பட பிரிண்ட் ஷாப் கோரா, இராதா, சரவணன், குலசேகரன், தேவராஜ் பாண்டியன், தஞ்சை மாநகர இணைச்செயலாளர் இரா வீரக்குமார், தஞ்சை மாநகர துணை செயலாளர் இதுதான் இளவரசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் வழக்குரைஞர் அணி மாநில செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன், வழக்குரைஞர் அணி மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் கணேசன் ஆகியோ பயிற்சி பட்டறையை மிக சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார்கள்
பெரியார் உலகத்துக்கு நிதி
வழக்குரைஞர் நா.கணேசனின் சகோதரர் நா.மணிகண்டன் – பாக்கி யம் ஆகியோர் பேத்தியும், மது மணிமாற னின் மகளுமான சாரல் பிறந்த நாள் நினைவாக பெரியார் உலகத்திற்கு ரூ5000, துணை பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியாரிடம் வழங்கப்பட்டது வழக்குரைஞர் சுபா உடனிருந்தார்.
புத்தக விற்பனை
10,112 ரூபாய்க்கு புத்தகம் விற்பனை ஆயின
வகுப்பெடுத்த பேராசிரியர் பெரு மக்கள், மற்றும் உழைப்பை நல்கிய கழகப் பொறுப்பாளர்கள் தோழர்களுக்கு கழக வழக்குரைஞர் அணி சார்பில் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப் பட்டது.