மறைவு

1 Min Read

தென்காசி மாவட்ட கழக செயலாளர் கை.சண்முகத்தின் தாயார் கை.பாப்பா நேற்று (25.1.2025) காலை 8 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம்.
செய்தியறிந்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் கை.சண்முகத்திடம் கைப்பேசியில் தொடர்பு கொண்டு அம்மையாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினர்.

அம்மையாரின் உடலுக்கு தென்காசி மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.
நாளை (27.1.2025) காலை 8 மணியளவில் தென்காசி, வடகரை, 108, தைக்கால் தெருவில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு, தந்தை பெரியார் உடற்கொடை, குருதிக் கொடை இயக்கம் ஏற்பாட்டில் அம்மையாரது உடல் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கப்படும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *