ஒழுக்கமுள்ளவன் மூலையில் கிடப்பான். ஒழுக்கம் கெட்டவன் பலராலும் போற்றப்படுவான். தனிப்பட்ட ஒவ்வொருவனும் ஒழுக்கத்தைப் பின்பற்றுவதில்லையே! முதலில் ஒழுக்கத்திற்கு மதிப்பிருந்தால் அல்லவா ஒவ்வொருவருக்கும் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க ஆசை இருக்க முடியும்? இப்படிப்பட்டவர்கள் நிறைந்த நாட்டில் — அதுவும் ஒழுக்கமற்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயகத்தின் தலைவன் பித்தலாட்டத்தில் கைதேர்ந்தவனாகவேயன்றி எப்படி ஒழுக்க சீலனாக இருக்க முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’