26.1.2025 ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

காஞ்சிபுரம்: காலை 10 மணி * இடம்: தமிழர் தலைவர் கூடம், குறளகம் (மாவட்டத் தலைவர் இல்லம்), ஓரிக்கை, காஞ்சிபுரம் * தலைமை:
அ.வெ.முரளி (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (பெரியார் பெருந்தொண்டர்), முனைவர் பா.கதிரவன் (மாவட்டத் துணைத் தலைவர்) * கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) * பொருள்: 3.2.2025 திங்கள்கிழமை அறிஞர் அண்ணா நினைவு நாள் – தமிழர் தலைவர் காஞ்சி வருகை * நன்றியுரை: கி.இளையவேள் (மாவட்டச் செயலாளர்)

விருத்தாசலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
விருத்தாசலம்: மாலை 4.30 மணி * இடம்: பெரியார் தேநீர் விடுதி, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் எதிரில், விருத்தாசலம் * தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட காப்பாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (காப்பாளர்), வை.இளவரசன் (கழக பேச்சாளர்) * கருத்துரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பொருள்: பிப்ரவரி 15 சிதம்பரம் கழகப் பொதுக்குழு, மாவட்டக் கழக வளர்ச்சிப் பணிகள் *விழைவு: கழகத் தோழர்களின் தவறாத வருகையும், ஆலோசனையும் * இவண்: ப.வெற்றிச்செல்வன் (மாவட்ட செயலாளர்),
த.சீ.இளந்திரையன் (மாவட்டத் தலைவர்).

27.1.2025 திங்கள்கிழமை
அறந்தாங்கி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
அறந்தாங்கி: மாலை 5 மணி * இடம்: திமுக அலுவலகம், ஆலங்குடி * தலைமை: க.மாரிமுத்து (அறந்தாங்கி மாவட்டத் தலைவர்) * முன்னிலை: கறம்பக்குடி க.முத்து (மாநில அமைப்பாளர், பெரியார் வீரவிளையாட்டுக் கழகம்), குப்பக்குடி இரா.இளங்கோ (அறந்தாங்கி மாவட்ட துணைத் தலைவர்) * கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: சுயமரியாதைச் சுடரொளி பெ.இராவணனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு, பிப்ரவரி 14ஆம் தேதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வருகை, அமைப்புப் பணிகள் * அழைப்பு: ச.குமார் (மாவட்டச் செயலாளர், அறந்தாங்கி)

வேலூர் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் இல்லங்களில் சந்திப்பு
காலை 9 மணி குடியேற்றம் முதல் மதியம் 2 மணி ஆற்காடு வரை * தலைமை: ஊமை ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: வி.சடகோபன் (வேலூர் மாவட்ட காப்பாளர்) * பொருள்: இயக்க வளர்ச்சிப் பணிகள், சிதம்பரம் பொதுக்குழு, விடுதலை சந்தா, பெரியார் உலகம் * இவண்: வி.இ.சிவக்குமார் (மாவட்ட தலைவர்), உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்) * குறிப்பு: தோழர்களை நேரடியாக இல்லந்தோறும் சந்திக்க வருகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *