சென்னை, ஜன. 25- உடல் ஆரோக்கி யத்தை மேம்படுத்தும் வகையில், ரூ.10 கோடி மதிப்பில் பெண்களுக்கான 39 உடற்பயிற்சிக் கூடங்கள் கட்டும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி மேயர் 2024-2025ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டு, முதற்கட்டமாக ரூ.10 கோடி மதிப்பில் பெண்களுக்கான 39 உடற்பயிற்சிக் கூடங்கள் கட்டு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன.
உடற்பயிற்சிக் கூடங்கள்
கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை மாநகராட்சியில் ஆண்களுக்கான உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சிக் கூடங்கள் ஏது மில்லை என்ற குறையை போக்கிடும் வகையிலும், பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டும் மாநகராட்சிப் பகுதிகளில் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மேயர் 2024-2025ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை மாநகராட் சிக்குட்பட்ட பகுதிகளில் பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், முதற்கட்டமாக ரூ.9.97 கோடி மதிப்பில் பெண்களுக்கான 39 உடற்பயிற்சிக் கூடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 22 பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், 4 உடற்பயிற்சிக் கூடப் பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளன. 13 உடற்பயிற்சிக் கூடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த உடற்பயிற்சி கூடங்களில் டிரெட்மில், சைக்கிளிங் மற்றும் இஎப்எக்ஸ் இயந்திரங்கள், ஹைடிராலிக் வெயிட் லிப்டிங் மெஷின் என அனைத்து உபகரணங்கள் மற்றும் குடிநீர் வசதி, பாதுகாவலர்கள் என அடிப்படை வசதி களும் இந்த உடற்பயிற்சிக் கூடங்களில் அமைய உள்ளது.