சென்னையில் ரூபாய் 10 கோடியில் 39 மகளிர் உடற்பயிற்சிக் கூடங்கள்

1 Min Read

சென்னை, ஜன. 25- உடல் ஆரோக்கி யத்தை மேம்படுத்தும் வகையில், ரூ.10 கோடி மதிப்பில் பெண்களுக்கான 39 உடற்பயிற்சிக் கூடங்கள் கட்டும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சி மேயர் 2024-2025ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டு, முதற்கட்டமாக ரூ.10 கோடி மதிப்பில் பெண்களுக்கான 39 உடற்பயிற்சிக் கூடங்கள் கட்டு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன.

உடற்பயிற்சிக் கூடங்கள்

கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை மாநகராட்சியில் ஆண்களுக்கான உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சிக் கூடங்கள் ஏது மில்லை என்ற குறையை போக்கிடும் வகையிலும், பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டும் மாநகராட்சிப் பகுதிகளில் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மேயர் 2024-2025ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை மாநகராட் சிக்குட்பட்ட பகுதிகளில் பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், முதற்கட்டமாக ரூ.9.97 கோடி மதிப்பில் பெண்களுக்கான 39 உடற்பயிற்சிக் கூடங்கள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 22 பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், 4 உடற்பயிற்சிக் கூடப் பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளன. 13 உடற்பயிற்சிக் கூடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த உடற்பயிற்சி கூடங்களில் டிரெட்மில், சைக்கிளிங் மற்றும் இஎப்எக்ஸ் இயந்திரங்கள், ஹைடிராலிக் வெயிட் லிப்டிங் மெஷின் என அனைத்து உபகரணங்கள் மற்றும் குடிநீர் வசதி, பாதுகாவலர்கள் என அடிப்படை வசதி களும் இந்த உடற்பயிற்சிக் கூடங்களில் அமைய உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *