கோமியம் புகழ் அய்.அய்.டி. இயக்குநருக்கு அஞ்சலில் கோமியம் அனுப்பும் போராட்டம்

1 Min Read

கோவை, ஜன.25- மாட்டு கோமியத்தில் மருத்துவ பயன்கள் இருப்பதாக அய்.அய்.டி இயக்குநர் கூறிய நிலையில், கோவையில் திராவிட தமிழர் கட்சியின் சார்பில் அய்.அய்.டி இயக்குநர் காமக்கோடிக்கு அஞ்சலில் மாட்டு கோமியம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

மாட்டு கோமியத்தில் மருத்துவ பயன்கள் உள்ளன என அய்.அய்.டி இயக்குநர் காமகோடி கூறி இருந்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. அவருக்கு ஆதரவாக பா.ஜ.க வின் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

போராட்டம்

இந்த நிலையில், கோவையில் திராவிட தமிழர் கட்சியின் சார்பில் அய்.அய்.டி இயக்குநர் காமகோடிக்கு அஞ்சலில் மூலம் மாட்டு கோமியம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள அஞ்சல் நிலையத்தில் பார்சலில் மாட்டு கோமியத்தை கொண்டு வந்த திராவிட தமிழர் கட்சியினர் அஞ்சல் நிலைய ஊழியர்களிடம் கொடுத்து பார்சல் அனுப்ப வேண்டும் என கூறினர்.

அதற்கு திரவ பொருட்களை பார்சலில் அனுப்ப முடியாது எனவும் கிருமிகள் பரவும் எனவும் கூறி அஞ்சல் ஊழியர் பார்சலை பெற மறுத்தார்.

ஆனால் பார்சலை அனுப்ப அனுமதி தர வேண்டும் என திராவிட தமிழ் கட்சியின் சார்பில் வலியுறுத்தப்பட்டதை தொடர்ந்து உயர் அதிகாரிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அனுமதி பெற்ற அஞ்சல் ஊழியர்கள் பார்சலை பெற்றுக் கொண்டனர்.

மாட்டு கோமியத்தில் மருத்துவ பயன்கள் உள்ளன என அய்.அய்.டி இயக்குநர் கூறியது சர்ச்சைக்கு உள்ளான நிலையில் அஞ்சல் நிலைய ஊழியர்கள் கிருமிகள் பரவும் எனக் கூறி மறுத்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதன் இடையே அய்.அய்.டி இயக்குநருக்கு ஆதரவாக பேசியதாக வானதி சீனிவாசன் மற்றும் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு மாட்டு கோமியத்துடன் விருப்பப்பட்டால் மாட்டுக் கறியையும் அனுப்புவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *