எம்.என்.ராய்

Viduthalai
1 Min Read

புகழ் பெற்ற பகுத்தறி வாளர் எம்.என்.ராய் மறைந்த நாள் இந்நாள் (25.1.1954).
தந்தை பெரியார் விடுதலையில் எம்.என்.ராய் குறித்து இவ்வாறு எழுதியுள்ளார்.
‘‘எம்.என்.ராய் ரஷ்யா வில் இருந்தவர் – லெனின் உள்ளிட்ட பொதுவுைடமைக் கட்சியின் பெருந்தலைவர்களோடு பணியாற்றியவர் – அவரிடம் நம் தோழர்கள் நான் எழுதிய புத்தகங்களைக்காட்டி இருக்கின்றனர். அவர் அவைகளை பார்த்து விட்டு என்னைக் காண வேண்டும் என்று ஆசைப் பட்டிருக்கிறார். நானும் அவரைக் காண வேண்டும் என்று எண்ணி இருந்தேன். . எம்.என்.ராய், தனது மனைவி எல்லென்ராயுடன் சென்னை வந்து எமது விருந்தினராகத் தங்கினார்.
நான் அவரை சந்திக்கச் சென்றேன். என்னைக் கண்டதும் அவர் என்ன செய்தார் தெரியுமா? எனக்கே சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது. என் காலில் விழுந்து வணங்கினார். நான் மிகவும் சங்கடப்பட்டு ஒரு பகுத்தறிவாதி இப்படி நடந்து கொள்ளலாமா! என்று கேட்டேன்.

பிறகு சில நாள்கள் நான் அவருடனேயே சேர்ந்து பிரச் சாரம் செய்து வந்தேன். ஒரு முறை அவர் டேராடூனில் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். விருந்துக்கு வந்திருந்தவர்களிடையே நான் எழுதிய புத்தகங் களைப் பற்றி விளக்கம் செய்து என்னை அறிமுகப் படுத்தினார். அங்கு வந்திருந் தவர்கள் அனை வரும் பல முறை எழுந்து எனக்கு மரியாதை செய்தனர்.’’ (விடுதலை 22.4.1965)

அறிஞர் அண்ணா தந்தை பெரியாருடன் சுற்றுப்பயணம் செய்தார். வடநாட்டில் பெரியார் சுற்றுப்பயணம் செய்தபோது, உடன் சென்ற அண்ணா தந்தை பெரியாரின் பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். அப்போது கல்கத்தாவில் இருந்த பொதுவுைடமைவாதி எம்.என்.ராய் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.
ரயில்வே நிலையத்தி லுள்ள உணவு விடுதிகளில் ‘பிராமணாள், இதராள்’ என்றிருப்பதைக் கண்டித்து, 20.3.1941இல் அது ஒழிவதற்கு காரணமாக விளங்கினார்.

– மயிலாடன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *