திருவாரூர் பகுதியில் தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் (24.1.2025)

viduthalai
2 Min Read

ரெ. இராமசாமி – பரிபூரணம் ஆகியோரின் ‘பரிபூரணக்குடில்’ இல்லத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். இல்லத்தில் அமைந்துள்ள தந்தை பெரியர் நூலகத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: நாகை மாவட்டச் செயலாளர் (தி.மு.க.) என். கவுதமன், சட்டமன்ற உறுப்பினர் வி பி.மாலி, நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி. ஏ. நெப்போலியன். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், இல. மேகநாதன், வீ மோகன், ஜெ.புபேஷ் குப்தா, கிருஷ்ணமூர்த்தி, இரா. மாதவன், பிரபாகரன் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர்.

திராவிடர் கழகம்

நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் என். கவுதமன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. மாலி, நாகை மாவட்ட கழகத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், இரா. மாதவன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

திராவிடர் கழகம்

கீழ்வேளூர் ஒன்றியம் இராயத்தமங்கலம் இராமசாமி -பரிபூரணம் இல்ல அறிமுக விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நீலாபாடியில் தந்தை பெரியாரின் சிலை அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது நிகழ்வில் நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஷ் குப்தா, மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீ.மோகன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத்தலைவர் இல.மேகநாதன், பகுத்தறிவாளர் கழகத்தின் நாகை மாவட்ட தலைவர் மு.க.ஜீவா, மாவட்ட இளைஞரணி தலைவர் சு.ராஜ்மோகன், மாவட்ட துணைத்தலைவர் பொன்.செல்வராசு, கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் பாவா.ஜெயக்குமார், கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் செருநல்லூர் பாக்கியராஜ், நாகை நகர தலைவர் தெ.செந்தில்குமார், நாகை ஒன்றிய தலைவர் சோம.வீரமணி, நாகை ஒன்றிய செயலாளர் குஞ்சுபாபு.சின்னதுரை மற்றும் பொதுமக்களும், தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர். தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். *திருவாரூர் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு .

திராவிடர் கழகம்

* திருவாரூர் சுயமரியாதைச் சுடரொளி எஸ்.எஸ். மணியம் அவர்களின் மகன் மறைந்த கிருஷ்ணமூர்த்தி படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரது மகன் அருண்காந்தி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் கழக பொறுப்பாளர்கள் உள்ளனர். பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தசாமிக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்தினார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *