சென்னை, ஜன.23 “100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி அளிக்காத பா.ஜ.க. ஒன்றிய அரசை கண்டிக்க மறுப்பது ஏன் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி இருப்பதாவது:
முதலமைச்சர் கடிதம்
“ஒன்றிய பாஜக அரசிற்கு ஒரு பாதிப்பென்றால் ஓடி வந்து குறுக்கே விழுந்து அதை மடைமாற்றம் செய் வதே எதிர்கட்சித ்தலைவர் பழனிசாமி அவர்களின் கடமை என்பதை மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்துள்ளார்.
100 நாள் வேலைத் திட்டம் என்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்காக ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. இந்த நயவஞ்சக செயலை கண்டித்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய (MGNREGS) நிதியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்திப் பொங்கலுக்கு முன்பே பிரதமருக்குக் கடிதம் எழுதி இருந்தார். இதை ஆதரித்து தமிழ்நாட்டு மக்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டியபழனிசாமி , தனது குரலை அவதூறு பரப்ப மட்டுமே பயன்படுத்தி வருவது கண்டனத்திற்குரியது.
பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவரா?
ஒரு பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆதர வாகக் குரல் எழுப்பியிருக்க வேண்டுமல்லவா?
எதற்கெடுத்தாலும் செய்தித்தாளிலே படித்தேன், தொலைக்காட்சியைப் பார்த்து தெரிந்து கொண்டேன் எனக் கூறும் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒன்றிய பாஜக அரசு நமக்கு நிதி ஒதுக்காதது பற்றித் தெரியாதா?.
புயல் வெள்ள நிவார ணம், கல்வி நிதி, 100 நாள் வேலைக்கான நிதி ஆகிய வற்றை ஒதுக்காமல் தமிழ் நாட்டு மக்களை வாட்டி வதைத்துவரும் பாஜக அரசோடு மறைமுகக் கூட்டணி வைத்துக் கொண்டு, ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து
ஒரு வார்த்தையாவது பேச முடியாமல் வாய் மூடி இருப்பது ஏன்?
தனது இயலாமையை மறைக்கவே மக்களின் நலனில் அக்கறை கொண்டு அனுதினமும் செயல் பட்டு வரும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மீது அவதூறு பரப்புவதையே அவர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்”.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.