இணைய வழியில் பெறப்படும் ஆவணங்களை பதிவு செய்ய மறுத்தால் கடும் நடவடிக்கை பதிவுத்துறை எச்சரிக்கை

viduthalai
1 Min Read

சென்னை, ஜன.22- இணைய வழியில் பெறப் படும் ஆவணங்களை பதிவு செய்ய மறுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆவணம்

இணைய வழி பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் ஆவணங்களை அன்றன்றே பதிவு செய்து இணைய வழியில் சார் பதிவாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்று ஏற்கெனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அவ்வாறு செய்யாமல் வெவ்வேறு காரணங்களைக் கூறி தட்டிக் கழிப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதைத் தவிர்க்கும்படி பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

கீழ்கண்ட காரணங் களை தெரிவித்து ஆவணங்களை திருப்பி அனுப்பக் கூடாது என அனைத்து கள அலுவலர்களுக்கும் தெளிவுரைகள் வழங்கப் பட்டுள்ளன.

ஆவணம் இணை யத்தில் தாக்கல் செய்யப் பட்ட அன்றே அதனை உரிய முறையில் பின்பற்றி பதிவு செய்ய வேண்டும்.
மூன்று நாட்களுக்கு மேல் ஏதேனும் இணைய வழி ஆவணங்கள் நிலுவையில் இருந்தால், அதனை பதிவு செய்த பின்னரே நேரடி ஆவணப் பதிவினை மேற்கொள்ளும் வண்ணம் மென்பொருள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
திருப்புச்சீட்டு வழங்குமுன் ஆவணத்தை சரிபார்த்து குறைகளை தெரிவித்து ஒரே முறையில் திருப்புச்சீட்டு வழங்க வேண்டும்.

தேவையின்றி ஒரு முறைக்கு மேல் திருப்புச் சீட்டு வழங்கக் கூடாது.

இணைய வழி ஆவணப் பதிவைப் பொறுத்து முன் அசல் ஆவணம் கோரத் தேவையில்லை.
இணையத்தில் உருவாக்கப்படும் ஆவணமே, சமர்ப்பிக்கப் பட்டு, சார்பதிவாளரால் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஆவணதாரர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை.

என்ன தவறு உள்ளது என்பது குறிப்பிட்டு மட்டுமே திருப்புச்சீட்டு வழங்க வேண்டும்.

மேற்கூறிய விளக்கங் களை பின்பற்ற வேண்டும். தேவையற்ற காரணங் களை தெரிவித்து இணைய வழி பெறப்படும் ஆவணங்களை பதிவுக்கு மறுக்கும் நிகழ்வுகள் மிகவும் கடுமையாக கருதப்பட்டு, சம்பந்தப் பட்ட சார்பதிவாளர்கள் மற்றும் அதனை கண்காணிக்கத் தவறிய மாவட்ட பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *