செய்திச் சுருக்கம்

1 Min Read

மின் பயன்பாட்டை அறிய மீட்டர்

சிறு தொழில்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட தாழ்வழுத்த மின் இணைப்புகளில் உச்ச நேர மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்க டி.ஓ.டி. என்ற மீட்டர் பொருத்தும்படி, பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மின் வாரியம் உத்ததரவிட்டுள்ளது.

சுகாதார செயல்பாடுகள் ஆய்வு

ஒன்றிய அரசின் நிதி ஆதாரத்தின் கீழ் செயல்படுத்தப்படும் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம், முத்து லட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டம், போலியோ ஒழிப்பு நடவடிக்கைகள், கொசுக்கள் – பூச்சிகள் மூலம் பரவும் நோய்கள் ஒழிப்பு திட்டம், குழந்தைகள் – கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி திட்டம், இ- சஞ்சீவனி தொலை நிலை மருத்துவம் ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள், அதற்காக செலவிடப்பட்ட தொகை மற்றும் பயன்பாடுகள் குறித்து 20.1.2025 அன்று சென்னையில் சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற குழு தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம்கோபால் யாதவ் தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர், மாநிலத்தின் சுகாதார திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்தனர்.

வெளிநாட்டு கைதிகள் நலனுக்கான விதிகள்!

இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதிகளின் நலனுக்கான விதிகள் தொடர்பாக ஒன்றிய உள்துறை செயலர் பதில் அளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாசுக் கட்டுப்பாட்டு ஆய்வு

மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், மட்காத கழிவுப் பொருள்கள் உள்ளிட்டவைகள் தமிழ்நாடு எல்லைப் பகுதிகளிலுள்ள மாவட்டங்களில் கொட்டப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது தொடர்பாக, தமிழ்நாடு, கேரள எல்லைப் பகுதியான குமுளியில், ஒன்றிய மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ் பயிற்றுவிக்க நடவடிக்கை

தமிழ்நாட்டில் பணிபுரிந்து வரும் வட மாநிலத்தவர்களின் குழந்தைகளை, அரசுப் பள்ளிகளில் சேர்த்து தமிழை பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *